இளைஞர்களே கவனம்…! இன்று நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ இன்று நடைபெறவுள்ளது.

சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது.


இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ உள்ள முன்னனி வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ தங்களின்‌ காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்‌ளனர்‌.

ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ 26 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 3 மணி வரை நடைபெறவிருக்கும்‌ இம்முகாமில்‌ 8-ம்‌ வகுப்பு, 10-ம்‌ வகுப்பு, 12-ம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல்‌, செவிலியர்‌, ஆசிரியர்‌, தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும்...! எவ்வளவு கட்டணம் தெரியுமா...?

Sun Mar 26 , 2023
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 31-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை- குஜராத் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3-ம் தேதி இந்த போட்டியானது நடைபெற உள்ளது. போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் […]
IMG 20230326 061904

You May Like