தாலிகட்டிய கணவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனை வைத்தே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வேடசந்தூர் சந்தைப் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவரது மனைவி விஜயசாந்தி . இத்தம்பதிக்கு ஒரு மகன் , ஒருமகள் உள்ளனர். இவர் இரும்புக் கடை ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. விஜயசாந்தியை அவரது கணவர் தாக்கியுள்ளார். இந்நிலையில் கழுத்தறுக்கப்பட்டு இறந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் நவீன் குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தர்.
இதில் விஜயசாந்தி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது வேறு வழியின்றி உண்மையை கூறியுள்ளார். கள்ளக்காதல் விஷயம் கணவருக்கு தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது எனவே கள்ளக்காதலனை வைத்தே கணவரை கொன்றதாக கூறினார்.
இதையடுத்து ஜனங்கோட்டை பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் விஜயசாந்திக்கும் கொலைக்கும் எந்த சம்மந்தமில்லாதது போல் நாடகமும் நடித்து வந்துள்ளார். அதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.