கணவரால் கள்ளக்காதலுக்கு பிரச்சனை…. காதலனை வைத்தே கணவர் கொலை …

தாலிகட்டிய கணவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனை வைத்தே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வேடசந்தூர் சந்தைப் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவரது மனைவி விஜயசாந்தி . இத்தம்பதிக்கு ஒரு மகன் , ஒருமகள் உள்ளனர். இவர் இரும்புக் கடை ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. விஜயசாந்தியை அவரது கணவர் தாக்கியுள்ளார். இந்நிலையில் கழுத்தறுக்கப்பட்டு இறந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் நவீன் குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தர்.
இதில் விஜயசாந்தி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது வேறு வழியின்றி உண்மையை கூறியுள்ளார். கள்ளக்காதல் விஷயம் கணவருக்கு தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது எனவே கள்ளக்காதலனை வைத்தே கணவரை கொன்றதாக கூறினார்.
இதையடுத்து ஜனங்கோட்டை பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் விஜயசாந்திக்கும் கொலைக்கும் எந்த சம்மந்தமில்லாதது போல் நாடகமும் நடித்து வந்துள்ளார். அதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

Next Post

"தீபாவளி பண்டிகை" இதை எல்லாம் மறக்காமல் கடைபிடிக்க வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு

Sun Oct 23 , 2022
தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி கொண்டாப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், […]
TN govt 1

You May Like