ஒரு சொத்தை பதிவு செய்தால் மட்டும் அந்த சொத்தின் உரிமை கிடைக்காது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பதிவு ஆவணங்கள் வெறும் கூடுதல் ஆதாரமாகவே பார்க்கப்படும் என்றும், உரிமையை நிலைநாட்ட, அனைத்து சட்டபூர்வ ஆவணங்களும் இருந்தாலே தான் உரிமை உரியவரிடம் இருப்பதாக கருதலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுதியான உரிமைக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள்:
- சேல் அக்ரிமென்ட் (விற்பனை ஒப்பந்தம்)
- பத்திரப்பதிவு ஆவணம்
- தடையில்லா சான்றிதழ் (No Encumbrance Certificate)
- சொத்து வரி ஆவணங்கள்
- மியூட்டேஷன் சான்றிதழ் (Mutation Certificate)
- மின், தண்ணீர், சொத்து வரி பெயர் மாற்றங்கள்
அதேபோல் ஆவணங்கள் அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து, சொத்தின் உரிமை பற்றிய விவரங்களை பதிவு செய்யும், ‘மியூட்டேஷன்’ சான்றிதழ் (பிறழ்வு சான்றிதழ்) ஆகியவை அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் ஒரு சொத்து முழுமையாக இன்னொருவருக்கு அதன் உரிமை மாற்றப்பட்டதாக கருதப்படும்” இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் விளைவாக ரியல் எஸ்டேட் துறை மற்றும் சட்ட நடைமுறைகள் மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. பில்டிங் டெவலப்பர்கள், வாங்குபவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்ட கட்டமைப்பிற்குள் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த புதிய தீர்ப்பு காரணமாக சொத்து பரிவர்த்தனைகளை மிகவும் நம்பகமானதாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் சட்டப்பூர்வ உரிமை வெறும் பதிவை விட முக்கியமானது என்பதால் சொத்து மதிப்புகளையும் அது பாதிக்க வாய்ப்பு உள்ளது.
சொத்து வாங்கும் முன் அல்லது வாங்கிய பிறகு, அனைத்து சட்ட ஆவணங்களும் முறையாக இருப்பதா என ஒரு சொத்து சட்ட நிபுணரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம். இந்த தீர்ப்பு மூலம், சொத்து உரிமை தொடர்பான சட்டங்களை இந்தியா முழுவதும் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டிய தேவைத் தெளிவாகும்.
பதிவும், உரிமையும் ஒன்றல்ல என்பதை வலியுறுத்தும் இந்த தீர்ப்பு, சட்டத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், ஒரு வலுவான சட்ட அடித்தளத்தை கட்டியமைக்க உந்துகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: இனி தட்கல் டிக்கெட் புக் செய்ய இது கட்டாயம்.. IRCTC-ன் புதிய விதிகள் அறிமுகம்…