அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகெங்கிலும் இருக்கக்கூடியவர்களை பதற செய்திருக்கிறது. ப்ளே ஸ்கூல் சென்ற ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் தான் அந்தக் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாது எல்லோரையும் பதறச் செய்து இருக்கிறது .
அமெரிக்காவின் ஹரிஜோனா மாகாணத்தைச் சார்ந்தவர் அலைஸ் பிரயண்ட். இவரும் இவரது கணவரும் வேலைக்குச் சென்று வருவதால் தங்களது ஒன்றரை வயது குழந்தையை அருகில் இருக்கும் ப்ளே ஸ்கூலில் பராமரிப்பில் விட்டிருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக குழந்தை அந்தப் அந்த பிளே ஸ்கூலின் பராமரிப்பில் தான் பகல் நேரங்களில் இருந்து வந்திருக்கிறது.
மூன்று மாதங்களாகவே குழந்தை தனது வழக்கமான சுட்டித்தனங்களில் இருந்து விலகி ஒருவித பய உணர்வுடன் அமைதியாகவே இருந்திருக்கிறது. மேலும் இரவு நேரங்களில் அடிக்கடி அழுகவும் செய்திருக்கிறது. வேறு உடல் நல பிரச்சனை காரணமாக குழந்தை எவ்வாறு இருக்கிறது என்று பெற்றோர்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
சம்பவம் நடந்த தினத்தன்று அலிஷா குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த போது குழந்தை வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதனால் குழந்தையின் ஆடையை கழற்றிய அலிஷா, அதிர்ச்சி அடைந்தார். குழந்தையின் உடல் முழுவதும் மனிதனின் பல் தடங்கள் இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். மேலும் காவல்துறையினருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு சைக்கோ மறுபடியும் குழந்தையை இவ்வாறு கடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. குழந்தையின் உடலில் இருக்கும் பல் தடங்களில் இருந்து மாதிரிகளை எடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவல்துறை. அந்த சோதனைகளின் முடிவு வெளிவரும் போது உண்மை குற்றவாளி நிச்சயமாக பிடிபடுவார் என காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.