தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கை வெளியீடு…!

Central 2025

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் தொலைத்தொடர்பு, கேபிள் டிவி, டிடிஎச், வானொலி ஒலிபரப்பு சேவைகளின் செயல்திறன் குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சேவை வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் முழுமையான விவரங்கள் இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் (www.trai.gov.in மற்றும் http://www.trai.gov.in/release-publication/reports/performance-indicators-reports) வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏதேனும் ஆலோசனைகள் அல்லது கருத்துக்கள் இருந்தால், அது குறித்து இந்த ஆணையத்தின் ஆலோசகர் விஜய்குமாரிடம் தெரிவிக்கும் வகையில் அவரது +91-20907773 என்ற தொலைபேசி எண்ணிலும், advfea1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: இனி இது கட்டாயம்…! வீடு, மனைகளை விற்பனை செய்யும் புரோமோட்டர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

சென்னை வந்த விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி.. திணறிய பைலட்.. நீண்ட நேரம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு..!!

Fri Jun 20 , 2025
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4வது முறையாக, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 வகை விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. விமானி சிறிது நேரத்துக்கு பார்வை தடுமாறிய போதும், சூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது. பின்னர், இந்த […]
lazer light

You May Like