புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கே மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயல் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த மெர்சி ரம்யா இங்கே மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் படிப்பை முடித்த இவர், ஈரோடு, கன்னியாகுமரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் உதவி மற்றும் துணை ஆட்சியாளராக பணியாற்றி இருக்கிறார். இதனை தொடர்ந்து, வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றிய இவர், தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.