ஒரிசா ரயில் விபத்து நடந்து சரி செய்யப்பட்ட தண்டவாளங்களை கடந்து சென்றது புரி வந்தே பாரத்…..!

ஒரிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைந்து அதிவேகப் பயணிகள் ரயிலான புரி வந்து பாரத் ரயில் அந்த பகுதியை கடந்து சென்றுள்ளது.


ஹவுரா குறியிடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் இன்று விபத்து நடைபெற்ற பகுதியை பாதுகாப்பாக கடந்து சென்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகாநாகா சந்தை ரயில் நிலையத்தை இன்று காலை 9.30 மணி அளவில் வந்தே பாரத் ரயில் கடந்து சென்றுள்ளது.

இந்த நிகழ்வின் போது விபத்து நடைபெற்ற பகுதிகளில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி நேரில் ஆய்வு செய்து குறைந்த வேகத்தை இயக்கப்பட்ட ரயில்களின் ஓட்டுனர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். விபத்து நடைபெற்ற பகுதியில் இரு வழித்தடங்களிலும் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி முழு வெச்சில் நடைபெற்று நேற்று இரவு முழுமையாக முடிவடைந்ததாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விபத்து நடைபெற்ற பகுதியில் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றனர்.

Next Post

ஐபிஎல் அணியின் பெயரை டைட்டிலாக வைத்த வெங்கட் பிரபு..!! ’தளபதி 68’ படத்தின் மாஸ் அப்டேட்..!!

Mon Jun 5 , 2023
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். லியோ படத்தின் […]
WhatsApp Image 2023 05 16 at 4.53.10 PM

You May Like