இந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 90 பைசா வாட் வரி விதிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாபில் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், அரசின் கூடுதல் வருவாயை அதிகரிக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீது வாட் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமன் அரோரா, ” முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீது வாட் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.. ஏனெனில், நீண்ட காலமாக, அதன் தேவை உணரப்பட்டது.. மேலும் பஞ்சாப் இன்று வருவாய் ஈட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.

மேலும் பஞ்சாப் அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 90 பைசா வரி விதிக்கப்பட்டுள்ளது.. மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு விதிக்கப்படும் வாட் வரியை சிறிதளவு உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வாட் வரி அதிகரிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சிறிதளவு உயர்வுக்கு வழிவகுக்கும்.. இது அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிக சமநிலையை கொண்டு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

பஞ்சாபின் பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஷ்விந்தர் சிங் மோங்கியா இதுகுறித்து பேசிய போது “ தற்போது, வாட் வரி விதிப்பதன் மூலம், ஆண்டுக்கு, 300 முதல் 400 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என மாநில அரசு நம்புகிறது. இந்த உயர்வுக்கு முன், மொஹாலியில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.11 ஆக இருந்தது, இன்று முதல் அது லிட்டருக்கு ரூ.98க்கு மேல் இருக்கும்..

அதே போல் நேற்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.44 ஆக இருந்தது, இப்போது அதன் விலை லிட்டருக்கு ரூ.88க்கு மேல் இருக்கும் என்று மோங்கியா கூறினார். போக்குவரத்துச் செலவைப் பொறுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் விலை 10 பைசா முதல் 25 பைசா வரை சற்று மாறுபடும..” என்று தெரிவித்தார்..

மாநில அரசின் கூடுதல் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட முதல் வரி இதுவாகும். முன்னதாக கடந்த 2021 நவம்பர் மாதம் பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இனி ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிரமம் இருக்காது.. ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்..

Sat Feb 4 , 2023
ஒரு நிமிடத்திற்கு 2.25 லட்சம் டிக்கெட் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், 2023-2024 நிதியாண்டில் 7,000 கிலோமீட்டர்களுக்கு கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் “பயணிகள் முன்பதிவு அமைப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், மென்பொருள் மற்றும் இணையதள […]

You May Like