‘முழு உக்ரைனும் எங்களுடையது..’ என்று கூறும் புடின்.. உக்ரைனின் கடைசி தவறு குறித்தும் எச்சரிக்கை..

AA1H8hEv

ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் ஒரே மக்கள் என்றும், முழு உக்ரைனும் எங்களுடையது என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் பேசிய புடின், உக்ரைனை அழிக்க ரஷ்யாவுக்கு எந்த நோக்கமும் இல்லை என்ற நீண்டகால கூற்றுக்களை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆனால் அமைதி அடைய வேண்டுமென்றால் ரஷ்யாவின் பிராந்திய முன்னேற்றங்களை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்..


இதுகுறித்து பேசிய அவர் “ நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன்: ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் ஒரே மக்கள். எனவே, முழு உக்ரைனும் எங்களுடையது.. ஆனால் நாங்கள் உக்ரைனின் இறையாண்மையை ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கவில்லை. அதே நேரத்தில், உக்ரைன் சுதந்திரம் அடைந்ததற்கான நிலைமைகள், 1991 ஆம் ஆண்டு உக்ரைனின் சுதந்திரப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உக்ரைன் ஒரு அணிசேரா, அணுசக்தி அல்லாத, நடுநிலை நாடு என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த அடிப்படை மதிப்புகளுக்கு உக்ரைன் திரும்புவது நல்லது,” என்று கூறினார்.

பிரச்சனையை உருவாக்கும் உக்ரைன்

வடகிழக்கு நகரமான சுமி தாக்குதல் நேரடியாகக் கருத்து தெரிவித்த புடின், உக்ரைன் தரப்பில் இருந்து தொடர்ந்து ஷெல் தாக்குதல்களை மேற்கோள் காட்டி ரஷ்யப் படைகள் நகரத்தைக் கைப்பற்றுவதை நிராகரிக்கவில்லை என்று கூறினார். மேலும் “சுமியைக் கைப்பற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆனால் கொள்கையளவில் நான் அதை நிராகரிக்கவில்லை. உக்ரைன் எங்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்குகிறது” என்று கூறினார்.

சுமி பகுதியில் நடந்து வரும் தாக்குதலுக்கு மத்தியில் புடினின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அங்கு ரஷ்ய படைகள் 12 கிலோமீட்டர் ஆழம் வரை முன்னேறியதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவில் முறையாக இணைக்கப்பட்ட பிரதேசங்களில் சுமி இல்லை என்றாலும், இந்த முன்னேற்றம் போரின் விரிவாக்கத்தின் சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது.

தொடர்ந்து பேசிய புடின். “நாங்கள் உக்ரைனின் சரணடைதலைத் தேடவில்லை. களத்தில் உருவாகியுள்ள யதார்த்தங்களை அங்கீகரிக்க நாங்கள் வலியுறுத்துகிறோம். ரஷ்யாவின் நிலைப்பாட்டை அமைதியை விரும்பு அதே வேளையில் வேளையில், உக்ரைன் நேட்டோவில் சேரும் விருப்பத்தை கைவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீதான மாஸ்கோவின் கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும்” என்று அவர் கோரினார்.

உக்ரைனின் அணுசக்தி லட்சியங்கள் குறித்தும் புடின் பேசினார். உக்ரைன் அணு சக்தியை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்த கேள்விக்கு பதிலளித்த புடின், அது உக்ரைனின் கடைசி தவறு.. நிச்சயம் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறினார்.

உக்ரைனில் தொடரும் தாக்குதல்

இதனிடையே, ஒடேசா மற்றும் கார்கிவ் உள்ளிட்ட உக்ரேனிய நகரங்கள் மீது ரஷ்ய ட்ரோன்கள் நேற்றிரவு முழுவதும் தாக்குதல் நடத்தின. இதில் ஒருவர் உயிரிழந்தார். பல காயமடைந்தனர்.. தீ விபத்துக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்தன.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டினார். ஆனால் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரேம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அடுத்த வார தொடக்கத்தில் புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்படலாம் என்று கூறினார். இருப்பினும் உக்ரைன் இன்னும் அத்தகைய திட்டங்களை உறுதிப்படுத்தவில்லை.

Read More : இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துறது ரொம்ப கஷ்டம்.. போர் நிறுத்தமும் சந்தேகம் தான்.. ட்ரம்ப் பேச்சு..

English Summary

Russian President Vladimir Putin said that Russians and Ukrainians are one people, and all of Ukraine is ours.

RUPA

Next Post

மாத ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்வு.. தேர்தலுக்கு முன்னதாக முதலமைச்சர் அறிவிப்பு..

Sat Jun 21 , 2025
Bihar Chief Minister Nitish Kumar has announced an increase in the pension provided under the Social Security Pension Scheme from Rs. 400 to Rs. 1100.
pension 2025

You May Like