நாளை நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்களிக்கின்றார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எம்பியுமான ராகுல்காந்தி கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நாளை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நடைபெறுகின்றது. நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வாக்களிப்பார் என்று செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்துதனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் நாளை எங்கு வாக்களிப்பார் என கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ முகாமில் இருந்து சுமார் 40 ஜோடோ யாத்ரீகர்களுடன் ராகுல்காந்தி வாக்களிக்கின்றார். என பதிவிட்டுள்ளார்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் வாக்குகள் அக்டோபர் 19ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.