கர்நாடகாவில் இருந்து வாக்களிக்கின்றார் ராகுல்காந்தி !!

நாளை நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்களிக்கின்றார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எம்பியுமான ராகுல்காந்தி கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நாளை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நடைபெறுகின்றது. நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வாக்களிப்பார் என்று செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இது குறித்துதனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் நாளை எங்கு வாக்களிப்பார் என கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ முகாமில் இருந்து சுமார் 40 ஜோடோ யாத்ரீகர்களுடன் ராகுல்காந்தி வாக்களிக்கின்றார். என பதிவிட்டுள்ளார்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் வாக்குகள் அக்டோபர் 19ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Next Post

டெக்னாலஜி வளர்ச்சி !! இந்த 4 பொய்யை நீங்க நம்பினால் கோவிந்தாதான்!!!

Sun Oct 16 , 2022
இந்தியாவில் 5 ஜி சேவைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மோசடி கும்பலின் அட்டகாசமும் அளவில்லாமல் பெருகி வருகின்றது. ஏற்கனவே டெக்னாலஜி வளர்ச்சி என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். ’ஏ.டி.எம். மேலே நம்பர் சொல்லுங்கோ உங்க கார்டை அப்டேட் பண்ணுங்கோ ’’ இந்த மாதிரி ஏகப்பட்ட மோசடி அரங்கேறி வருவது நமக்குத் தெரியும். 5ஜி ஐ பயன்படுத்தி தற்போது புதுப்புது மோசடி நடந்து வருகின்றது. இதை பற்றி உங்களுக்கு […]
5 ஜி

You May Like