Rain | தமிழ்நாட்டிற்கு குட் நியூஸ்..!! கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் கொட்டப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்று முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வரும் 22, 23 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : BJP கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகளில் ஒதுக்கீடு..!! தினகரன் எங்கு போட்டி..?

Chella

Next Post

BREAKING | முன்கூட்டியே நீட் தேர்வு..!! ஜூலை 7ஆம் தேதி கிடையாது..!! திடீர் மாற்றம்..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!

Wed Mar 20 , 2024
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டு முக்கியமான போட்டித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருந்த நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதியே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 14 […]

You May Like