இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. வானிலை மையம் அறிவிப்பு…

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.. எனவே மீனவர்கள் இன்று இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

RUPA

Next Post

பாலியல் குற்றவாளிகளுக்கு முன் ஜாமின் இல்லை; உத்தரப்பிரதேச சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்..!!

Sat Sep 24 , 2022
உத்தரபிரதேச சட்டசபையில், குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. சிறார் பாலியல் வழக்குகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்கப்படகூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. மசோதா பற்றி பேசிய உத்தரபிரதேச சட்டசபை விவகார அமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, இதன்மூலம், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பு குறையும். பாதிக்கப்பட்ட பெண்ணையும், சாட்சிகளையும் அச்சுறுத்தும் வாய்ப்பு குறையும் என்று கூறினார். மேலும் இந்த […]
SEXUAL ABUSE 2

You May Like