தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருபதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், வாஜ்பாய் அரசில் இருந்த தமிழக கட்சி ஒன்று தங்களுடன் பேசு வருவதாக கூறினார். இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது. இதற்காக அந்த கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனால், மூன்று மாதங்களுக்குள் அதாவது வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பாஜக கூட்டணி விரிவடையும். இந்தக் கட்சி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி என்றார். பாஜகவுடன் ஏற்கெனவே கூட்டணி வைத்திருந்த கட்சி தான் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளது.
மேலும், பல கட்சிகள் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது. விரைவில் திமுக கூட்டணி உடையும். இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைவது உறுதி எனக் கூறினார்.இதையடுத்து அக்கட்சி மதிமுக தான் என்று தகவல் வருகிறது. ஆனால் இதை துரை வைகோ மறுத்துள்ளார்.
Read more: பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்து சொந்தமாகாது..!! – உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு