ராமநாதபுரம் சுகாதார சங்கம் சார்பாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்துள்ளது இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணிகளுக்கு மூன்று காலியிடங்களும் சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு ஒன்பது காலியிடங்களும் சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு மூன்று கால இடங்களும் என மொத்தம் 15 காலி இடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
இதில் மருத்துவ அதிகாரி பணிகளுக்கான காலியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்த மருத்துவராக இருக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு பிளஸ் 2வில் உயிரியல் அல்லது விலங்கியல் பாடத்தோடு 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது பொதுவானது. மேலும் இந்த பணிகளுக்கான உச்சபட்ச வயது வரம்பு 45 ஆகும்.
மருத்துவ அதிகாரிக்கு ஊதியமாக 60 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு ஊதியமாக 14 ஆயிரத்து 500 ரூபாயும் சுகாதாரப் பணியாளர் பணிக்கு ஊதியமாக 8,500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நேரடியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விபரங்களை அறிய ramanathapuram.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.