ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைகள் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை கூடுதல் சிறப்புடையதாகும். தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையை போல் ஆனி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்புடையதாகும். இதை ஆஷாட அமாவாசை என்றும் சொல்லுவதுண்டு.
அமாவாசை திதி, ஒரு குறிப்பிட்ட கிழமைகள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து வரும் போது அது அதிக சிறப்புடையதாக சொல்லப்படுகிறது. ஆனி மாத அமாவாசை திருவாதிரை நட்சத்திரம், வெள்ளிக்கிழமையில் இணைந்து வருவதால் இந்த நாளில் சில குறிப்பிட்ட பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்குவதால் முன்னோர்களின் ஆசிகளுடன், அளவில்லாத புண்ணிய பலன்களையும் நம்மால் பெற முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆஷாட மாதம் எனப்படும் ஆனி மாதத்தில் வரும் அமாவாசைக்கு ஆஷாட அமாவாசை என்று பெயர். தமிழ் ஆண்டில் நான்காவதாக வரும் இந்த அமாவாசை நமக்கும், நம்முடைய சந்ததிகளுக்கு மட்டும் இல்லாமல் நம்முடைய முன்னோர்களுக்கும் நன்மைகளை தரும் அமாவாசை ஆகும். ஆஷாட அமாடாசை என்பது முன்னோர்களுடன், சிவன் மற்றும் விஷ்ணுவை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் ஆஷாட அமாவாசை பித்ரு தர்ப்பணம், பிண்ட தானம், காயத்ரி ஜபம் ஆகியவை செய்வதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. ஆனி மாத அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு ஆனி மாத அமாவாசை இன்று ஜூன் 25 புதன்கிழமை நிகழ்கிறது. ஆனால், ஆனால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.56 மணிக்கு அமாவாசை தொடங்கியது. நாள் முழுவதும் அமாவாசை திதி உள்ளதால் இது சர்வ அமாவாசையாக கருதப்படுகிறது. அதுவும் சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து அமாவாசை என்பதால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு மற்றும் தானங்கள் இரண்டு மடங்கு பலனை தரக் கூடியதாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆனி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த பலன் நமக்கு கிடைப்பதுடன், நம்முடைய முன்னோர்களுக்கு மனநிறைவை தரும். 12 வருடங்கள் பிதுர் தர்ப்பணம் கொடுத்த திருப்தியை முன்னோர்களுக்கு ஏற்படுத்தும். இதனால் பித்ரு சாபம், பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் புனித நீராடுவது, மந்திர ஜபம் செய்வது, தானம் செய்வது உள்ளிட்ட அனைத்துமே பல மடங்கு அதிக பலனை தரக் கூடியதாகும்.
ஆனி மாத அமாவாசையில் பித்ருக்களின் ஆசிகளை பெறுவதற்கும், நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், கிரக கோளாறுகள், பித்ரு சாபங்கள் ஆகியவை நீங்குவதற்கும் சில குறிப்பிட்ட பொருட்களை தானம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆஷாட அமாவாசை அன்று ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும். ஆஷாட அமாவாசை அன்று கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன், ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆயுள், ஆரோக்கியம், முக வசியம், அழகு, உயர் பதவி, உடல் வலிமை, தலைமை பதவி, அதிகாரம், செல்வம், மனநிறைவு ஆகியவற்றை தருவது இந்த இரண்டு கிரகங்களும் தான்.
பித்ருக்களின் சாபத்தால் திருமணம், குழந்தை பேறு போன்ற சுப காரியங்கள் நடைபெறுவதில் தாமதம், தடைகள் இருந்தால் முன்னோர்களை சாந்தப்படுவதற்காக அமாவாசை தினத்தில் நிலத்தை தானமாக கொடுக்கலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. நிலத்தை தானமாக கொடுப்பதால் ஒருவர் தான் செய்த பாவங்களில் இருந்து விடுபட முடியும். அதே போல் நெல்லிக்காய், பால், நெய், தயிர் போன்ற பொருட்களை தானமாக கொடுப்பதால் பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
Readmore: மணமகன்கள் விற்பனைக்கு!. 700 ஆண்டுகளாக விநோத சடங்கை பின்பற்றும் இந்திய கிராமம்!. சுவாரஸிய காரணம்!.