ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை…? அமைச்சர் இன்று ஆலோசனை கூட்டம்…!

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது, வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வது, ரேஷன் கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Vignesh

Next Post

கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த வழிவகை செய்ய தமிழக அரசு திட்டம்...!

Mon Jul 3 , 2023
கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த வழிவகை செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள சுமார்‌ 2000 கல்குவாரிகள்‌ மற்றும்‌ சுமார்‌3500 கிரஷர்‌ யூனிட்டுகளில்‌ ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்‌பணிபுரிந்து வருகின்றனர்‌. தமிழகத்தின்‌ அத்தனை மாவட்டங்களிலும்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ கட்டுமானப்‌ பணிகள்‌, மெட்ரோ ரயில்‌ பணிகள்‌ மற்றும்‌ அரசுத்‌ திட்டங்களுக்கு, எம்‌.சாண்ட்‌ மற்றும்‌ ஜல்லி கற்கள்‌ வினியோகம்‌, […]
IMG 20230703 052730

You May Like