இந்திய ரிசர்வ் வங்கி, மே மாதத்தில் 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 88 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி மே மாதம் அறிவித்தது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கிளைக்கு சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதி வரை எந்த வங்கிக் கிளையிலும் தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.