ஞாபக சக்தி குறைவதற்கு முக்கிய காரணம் இதுதானா.. சரிசெய்ய இதோ டிப்ஸ்..!

உடலில் ஏற்படும் கால்சியத்தின் குறைபாட்டாட்டினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் சத்துக்களின் குறைபாட்டினால் மன அழுத்தம், குழப்பம், ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, பலவீனமான நகங்கள், பற்கூச்சம் மற்றும் எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம் போன்ற பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் சந்தித்து வருகின்றனர் என்று மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது.


கால்சிய சத்தினை மாத்திரையின்றி இயற்கை உணவு மூலமாக கிடைக்க செய்யலாம். அதை தயாரிக்கும் முறையை பற்றி இங்கே அறிவோம்.ஒரு கப் கேழ்வரகு மாவை எடுத்து கொண்டு வறுக்க வேண்டும். பிறகு இதனை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கருப்பு எள்ளுடன் சேர்த்து வறுக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் கேழ்வரகு மாவுடன் பொடியை சேர்த்து ஒன்றாக கலந்து காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி போட்டு வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும் . இதனை ஒரு டம்ளர் பாலுடன் 2 ஸ்பூன் கேழ்வரகு பவுடரை சேர்த்து கலந்து குடித்து வந்தால் போதும் . நிச்சயம் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.

1newsnationuser5

Next Post

#Mandous : இன்று தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!! உங்க மாவட்டமும் இருக்கா..?

Fri Dec 9 , 2022
சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று […]
Rains Students Rep PTI 190522 1200x800

You May Like