மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களின் வீடுகளுக்கு தலா ரூ.4,800 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்தபிறகு அவர் கூறுகையில், ’’மயிலாடுதுறை மாவட்டம், கடலூர், கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்த பின்னர் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும் என கூறினார்.
வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4,800 வழங்கப்படும் என ஏற்கனவே விதி உள்ளது. மழையால் குடிசை முழுவதும் இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். தமிழகத்தில் மழை பாதிப்புகளால் கடந்த சில நாட்களில் 2 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மழையால் குடிசைகள் இடிந்திருந்தால் ரூ.5000 வழங்கப்படும் எனவும் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4100 வழங்கப்படும் என்று மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூங.95,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பசு, எருமைகள் உயிரிழந்தால் தலா ரூ.30,000 வழங்கப்படும் என அரசு விதியில் உள்ளது. கடலூர், மயிலாடுதுறையில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகின்றார். இந்த நிலையில் நிவாரணம் விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.செம்மறி ஆடு, ஆடு மற்றும் பன்றி உயிரிழந்தால் ரூ.3000 வழங்கப்படும். மழையால் உயிரிழக்கும் எருது ஒன்றிற்கு ரூ.25,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்றுக்குட்டிக்கு ரூ.16,000 மற்றும் கோழி ஒன்றுக்கு ரூ.100 வழங்கப்படும் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது.