பாத்ரூமில் நிர்வாணமாக கிடந்த மனைவியின் சடலம்..!! கணவரின் காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

சென்னை வியாசர்பாடி காந்திபுரம் நகரை சேர்ந்தவர் ஜீவா (45). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சரிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே, சரிதா கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஜீவாவுக்கு மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று திரும்பிய நிலையில், ஜீவா மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஜீவா வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சரிதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். என்ன செய்வது என்று தெரியாத ஜீவா, மனைவியின் உடலை பாயில் சுருட்டி குளியலறையில் வைத்துள்ளார். நேற்று காலையில் எதுவும் தெரியாதது போல சரிதாவை காணவில்லை என்று கணவர் ஜீவா கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எதைச்சையாக சரிதாவின் வீட்டுக்கு சென்று பார்த்த போது குளியலறையில் நிர்வாண நிலையில், அவரது உடல் பாயில் சுருட்டியவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த ஜீவாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்தப்பட்ட விசாரணையில் தாம்பத்திய உறவுக்கு அழைத்த போது வரமறுத்ததாலும், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜீவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஓபிஎஸ்-க்கு அடுத்த அடி..!! கர்நாடக சட்டமன்ற தேர்தல்..!! வேட்பாளர்கள் நிராகரிப்பு..!! ஈபிஎஸ் வேட்பாளர்கள் ஏற்பு..!!

Fri Apr 21 , 2023
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கர்நாடகா அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் போட்டியிடுகிறார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அதே புலிகேசி நகர் […]

You May Like