இன்று முதல் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை நிறுத்தம்..? பலமுறை சொல்லியும் கேட்காததால் அதிரடி..!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


அதுமட்டுமின்றி ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலரும் இணைக்காமலேயே கிடப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசமும் ஜூன் 30ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.

இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், இந்த கூடுதல் அவகாசத்திலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இணைக்காதவர்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் ரேஷனில் கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

இன்று முதல் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்தபடியே குப்பையை வீசினால் 8லட்சம் வரை அபராதம்...!

Sat Jul 1 , 2023
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அதன்படி வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் ஜூலை 1 முதல் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. குப்பை வீட்டிலிருந்து தான் வீசப்பட்டது என்பதை […]
throwing garbage from flats in singapore

You May Like