தகவல் அறியும் உரிமைச் சட்டம்…! தனிப்பட்ட தகவல்களை வெளியிட தமிழக அரசு தடை…!

Tn Govt 2025

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட அரசு தடை விதித்துள்ளது.


தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6(2)-இன் படி, தகவலுக்காக கோரிக்கை செய்கிற விண்ணப்பதாரர் ஒருவர், அந்தத் தகவலினைக் கோருவதற்கான காரணத்தையோ அல்லது அவரை தொடர்பு கொள்வதற்காகத் தேவை இல்லாத விவரங்களைத் தவிர, தனிப்பட்ட பிற விவரங்கள் எவற்றையும் அளிக்க கோரிக்கை வைக்க முடியாது. மத்திய அரசின் 08.01.2014 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையில், பொது அதிகார அமைப்பின் இணையதளத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-இன் கீழ் விண்ணப்பம் அளிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை அதாவது பெயர், பதவி, முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் ஆகியவற்றை வெளியிடக்கூடாது என்பதற்கான அறிவுறுத்தங்களையும் வெளியிட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளிக்கும் விண்ணப்பதாரர்களின் அடையாளங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வரப்பெறுவதால், விண்ணப்பதாரர்களின் பெயர், பதவி, முகவரி, மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண். மற்றும் கைபேசி எண்கள் ஆகியவற்றின் விவரங்களை வெளியிடக்கூடாது வலியுறுத்தப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தங்களை தவறாது கடைபிடிக்குமாறும், விண்ணப்பதாரரின் விவரங்களை தங்களது துறையின் இணையதளத்திலோ அல்லது வேறு வழிமுறைகளிலோ வெளியிடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து அரசுக்கோ அல்லது தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கோ மேற்கொண்டு புகார்கள் வராத வண்ணம் செயல்படும் அனைத்து பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் முதல் மேல்முறை அலுவலர்களுக்கும் இதன் மூலம் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது .

Vignesh

Next Post

ஷாக்!. ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலை பயன்படுத்தி மேகி சமைத்த பெண்!. தீவிபத்து ஏற்படும் அபாயம்!. வைரல் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!

Sat Nov 22 , 2025
ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலைப் பயன்படுத்தி பெண் ஒருவர் மேகி சமைக்கும் வீடியோ வைரலாகி நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய ரயில்வே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. குடும்பத்துடன் ரயிலில் பயணிப்பவர்களுக்கு, குவியல் குவியலாக உணவுகளை எடுத்துச் சென்று, அதை ருசித்து, இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருப்பது மிகவும் இனிமையான நினைவுகளில் ஒன்றாகும். தெப்லா, மாத்ரி, பரோட்டா-சப்ஜி, லிட்டி-சிகா, பூரி-சப்ஜி போன்ற பயணப் பொருட்களிலிருந்து, நிலையங்களில் கிடைக்கும் சோலே பதுரே, […]
Woman Cooks Maggi on train

You May Like