பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் முதல் மரியாதை. இப்படத்தில் சிவாஜி நடிப்பை புகழாத நடிகர்கள் மற்றும் ரசிகர்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் சிவாஜி. இப்படம் தைரியமாக ஒரு மனிதன் வாழ்வை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு முன்பு வருவது காதலாகவும் திருமணத்திற்கு பின்பு வருவது நட்பாகும் சிறப்பாக எடுத்துக் காட்டி இருப்பார் இயக்குனர். இப்படம் தேசிய விருது வாங்கியது.
சிவாஜியும் ரஜினியும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். எப்போதும் சிவாஜி மீது ரஜினிக்கு ஒரு பாசமும் பற்றும் உள்ளது என்றே கூறலாம். இதற்கு சாட்சி ஒன்று உள்ளது. படையப்பா படத்தில் கே.எஸ்.ரவிகுமார் சிவாஜிக்கு ஒரு கோடி செக் கொடுத்திருக்கிறார். அதனை ரஜினிதான் கொடுக்க சொன்னார் என்று ரவிகுமார் கூறியும் இருக்கிறார். இப்படியான நிலையில், சிவாஜியின் ஒரு படத்தைப் பற்றி ரஜினி மோசமாக விமர்சித்திருக்கிறார் என்று சில நாட்களுக்கு பிரபல கதாசிரியர் கூறியதுதான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அன்னக்கிளி பட கதை எழுதிய பிரபல கதாசிரியர் செல்வராஜ் கூறியிருப்பதாவது, முதலில் முதல் மரியாதை திரைப்படமானது தயாரிக்கப்பட்டு அனைவரும் பார்த்த பொழுது ரஜினி அவர்கள் இந்த படம் குருட்டு அதிர்ஷ்டத்தில் கூட ஓடாது என சொன்னார். ஆனால் பாரதிராஜாவோ தன்னிடம் தைரியமாக இரு ஐயா இந்த படம் கண்டிப்பா வெற்றி பெறும் எனவும், அதன்பின் திருச்சியில் மாய்ஸ் தியேட்டர் ஓனர் ராமசாமி பார்த்த பின்பு திருச்சி மற்றும் தஞ்சாவூர் இரண்டுக்கும் விநியோக உரிமையை வாங்கிக் கொண்டதாகவும் பின் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Readmore: தமிழில் எழுதப்படிக்கத் தெரியுமா..? இந்து சமய அறநிலையத்துறையில் வேலை இருக்கு.. ரூ.36,800 சம்பளம்..!!