பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொதுவாக ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.. அதிலும் குறிப்பாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.. இந்நிலையில் பிக்பாஸ் 16 ஹிந்தி நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.. அவர் இந்த ஆண்டு பிக்பாஸ் 16 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அவருக்கு ரூ.1000 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது..
இந்நிலையில் சல்மான் கான் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.. பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் ” பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குகிறேனா இல்லையா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது..அதனால் நான் சில நேரங்களில் எரிச்சலடைகிறேன், இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கவில்லை என்று இவர்களிடம் கூறுவேன். ஆனால் இவர்கள் நான் இல்லையென்றால் வேறு யார் இதை செய்ய முடியும் என்று அவர்கள் கூறுவார்கள்.. அதனால், தயாரிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை.” என்று தெரிவித்தார்..
ரூ.1000 கோடி சம்பளம் பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்த சல்மான் கான், “நான் ஒருபோதும் இவ்வளவு தொகையைப் பெறமாட்டேன், உண்மையில் இந்த தொகையை நான் பெற்றால், நான் வேலை செய்வேன் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு வழக்கறிஞர்கள் தொடர்பான செலவு உள்ளிட்ட நிறைய செலவுகள் உள்ளன. இந்த வதந்திகளால், வருமான வரித்துறையினர் என்னை கவனிக்க தொடங்குவார்கள்…” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த சல்மான் ” இந்த நிகழ்ச்சியில் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன், மேலும் பலரை சந்திக்கிறேன், அவர்கள் தடம் புரளும் போதெல்லாம், நான் அவர்களை சரியான திசையில் கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி நடக்கும் நான்கு மாதங்களில், நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல மாறுகிறோம்..” என்று தெரிவித்தார்..