ரூ.1,000 உரிமைத்தொகை மேல்முறையீடு..!! கவலைப்படாதீங்க..!! பணி தொடங்கியாச்சு..!!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.1,000 கிடைக்காதவர்கள் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதன்படி, மேல்முறையீடு செய்யப்பட்டு புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் நவம்பர் மாதம் முதல் இத்திட்டத்தில் மேலும் இணைக்கப்பட்டு தற்போது மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்த விசாரணைக்கு தங்களை தொடர்பு கொள்வார்கள் என்றும் மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு..!! வருமான வரித்துறை அதிரடி சோதனை..!!

Wed Nov 22 , 2023
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்தனர். இந்நிலையில், தற்போது அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை […]

You May Like