இந்தியா, அமெரிக்கா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் கால் சென்டர் அமைத்து அதன் மூலமாக அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி அவர்களிடம் 165 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்த 4 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த மோசடி நபர்கள் தங்களை அமெரிக்க வருவாய்த்துறை போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் என்று தெரிவித்து அமெரிக்க குடிமக்களிடம் இணையதளம் மூலமாக பணம் பறித்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இதில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் விதத்தில், டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
குஜராத்தைச் சேர்ந்த பரத்அர்மார்க்கார் (28) மற்றும் வட்சல் மேத்தார் (29) டெல்லியைச் சேர்ந்த தீபக்அரோரா (45) மற்றும் பிரசாந்த் குமார்(45) உள்ளிட்ட 4️ பேர் இந்தியா மற்றும் உகாண்டாவில் இருக்கின்ற கால் சென்டர் மூலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளி மற்றும் சனி போன்ற நாட்களில் டெல்லி சிறப்பு காவல் பிரிவு அதிரடி தேர்தல் வேட்டை மேற்கொண்டது இதில் வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த இந்த நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அமெரிக்கர்களிடமிருந்து 165 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பதாக டெல்லி சிறப்பு காவல் துறை ஆணையர் தலிவால் தெரிவித்திருக்கிறார்