”வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை”..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். பெலகாவி நகரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் முக்கியமாக வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Rahul Gandhi PTI

தேசிய அளவில் அதிகம் ஊழல் புரியும் அரசாக கர்நாடக பாஜக அரசு இருப்பதாகவும் 40% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் கூறியதை ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார். காவல்துறை தேர்வில் முறைகேடு, துணை பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடு, துணை பொறியாளர் தேர்வில் முறைகேடு என்று பாஜக அரசு மீதான முறைகேடுகளை பட்டியலிட்டார். அண்மையில் பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகன் கமிஷன் தொகை வாங்கியபோது பிடிப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் பேசிய ராகுல் காந்தி, ”எத்தனையோ பேர்.. பிரதமர், பாஜக, ஆர்.எஸ்.எஸ், போலீஸ்., ஆகியோரைப் பார்த்து பயப்படலாம். ஆனால், நான் சிறிது கூட பயப்பட மாட்டேன். நான் எவ்வளவு தாக்கப்பட்டாலும், என் வீட்டுக்கு எத்தனை தடவை போலீஸ் அனுப்பப்பட்டாலும், எனக்கு பயம் கிடையாது. என்னை அச்சுறுத்த முடியாது. நான் உண்மையின் பக்கம் நிற்பேன்” என்றார்.

CHELLA

Next Post

நாயை பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்….! பாட்னாவில் பரபரப்பு…..!

Tue Mar 21 , 2023
தெரு நாயை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு நபர் மீது காவல்துறையில் புகார் வழங்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகி இருந்தது. இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று காவல்துறைக்கு புகார் வழங்கியிருக்கிறது. இந்த சம்பவம் ஹோலி தினத்தன்று புல்வாரி ஷெரிப்பின் பைசல் காலணியில் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.. ஒரு […]
’நாய்கள் ஜாக்கிரதைனு சும்மாவா சொன்னாங்க’..! நாய் குரைத்ததால் தாய், மகன்களுக்கு அரிவாள் வெட்டு..!

You May Like