ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்துவர்களுக்கு ரூ.37,000…! உடனே விண்ணப்பிக்கவும்…!

tn Govt subcidy 2025

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு ரூ.37,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட் சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் 28.02.2026-க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். எனவே இத்திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறிஸ்துவ மக்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ரெடிமேட் இஞ்சி பூண்டு விழுது பயன்படுத்துகிறீர்களா..? ஆரோக்கியத்திற்கு காத்திருக்கும் ஆபத்து..!! செஃப் தீனா எச்சரிக்கை..!!

Thu Nov 20 , 2025
இந்திய சமையலில் இஞ்சி பூண்டு விழுது என்பது பிரியாணி, புலாவ், அசைவ உணவுகள் என பலவற்றுக்கு இன்றியமையாத ஒரு பகுதியாகும். இந்த விழுதின் உண்மையான நோக்கம் சுவை மற்றும் வாசனைக்கு மட்டுமல்ல, அதன் பின்னால் ஏராளமான பாரம்பரிய ஆரோக்கிய ரகசியங்கள் மறைந்துள்ளன என்று உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இஞ்சி பூண்டு விழுதை ரெடிமேடாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வீட்டிலேயே தயாரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து […]
Deena 2025

You May Like