வேகமெடுக்கும் கொரோனா.. பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்பு RT-PCR பரிசோதனை கட்டாயம்..!!

pm modi 1 11zon

நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டிய நிலையில், தொற்று பரவல் குறித்து கவலை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 306 புதிய கோவிட்-19 வழக்குகளும், ஆறு இறப்புகளும் பதிவாகியுள்ளன. இறப்புகளில், மூன்று கேரளாவிலும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் முறையே ஒரு மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

தினசரி தொற்று எண்ணிக்கையில் கேரளா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 170 புதிய வழக்குகளைப் பதிவுவான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,223 ஆக உயர்ந்துள்ளன. குஜராத்தில் புதிதாக 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,223 ஆக உள்ளன. இதற்கிடையில், கர்நாடகாவில் 100 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. அங்கு மொத்த பாதிப்பு 459 ஆக உள்ளது.

டெல்லியிலும் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரொனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரைச் சந்திப்பவர்களுக்கு RT-PCR பரிசோதனை தேவை என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பல மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Read more: ராஜ்யசபா சீட் தராத அதிருப்தி: திமுக கூட்டணியில் இருந்து விலகும் மதிமுக..?

Next Post

அமெரிக்க தேசிய காவலர்கள் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்..!! இவர்களின் பவர் என்ன..?

Wed Jun 11 , 2025
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது போராட்டங்கள், வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால்தான் அமெரிக்க அரசாங்கம் நாட்டில் தேசிய காவலர்களை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல மாநிலங்களில் வன்முறை போராட்டங்கள் காணப்படுகின்றன. மக்களின் கோபம் தெருக்களில் வெடித்து வாகனங்களுக்கு தீ வைத்துள்ளது. தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படையை நிறுத்தியுள்ளார். இதனால்தான் […]
national guard

You May Like