நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டிய நிலையில், தொற்று பரவல் குறித்து கவலை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 306 புதிய கோவிட்-19 வழக்குகளும், ஆறு இறப்புகளும் பதிவாகியுள்ளன. இறப்புகளில், மூன்று கேரளாவிலும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் முறையே ஒரு மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
தினசரி தொற்று எண்ணிக்கையில் கேரளா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 170 புதிய வழக்குகளைப் பதிவுவான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,223 ஆக உயர்ந்துள்ளன. குஜராத்தில் புதிதாக 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,223 ஆக உள்ளன. இதற்கிடையில், கர்நாடகாவில் 100 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. அங்கு மொத்த பாதிப்பு 459 ஆக உள்ளது.
டெல்லியிலும் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரொனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரைச் சந்திப்பவர்களுக்கு RT-PCR பரிசோதனை தேவை என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பல மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
Read more: ராஜ்யசபா சீட் தராத அதிருப்தி: திமுக கூட்டணியில் இருந்து விலகும் மதிமுக..?