தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம்…! மத்திய அரசு நடவடிக்கை..

traffic bike 2025

பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை.


தேசிய நெடுஞ்சாலைகளில் குளிர்காலப் பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத்திறனைக் கையாள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொறியியல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.பொறியியல் நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த சாலை அடையாளங்கள், ஸ்டட்டுகள் மற்றும் பிரதிபலிப்பான்களை மீண்டும் நிறுவுதல், தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், கட்டுமானப் பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளாக, ‘விஎம்எஸ்’ பலகைகள் மூலம் பனிமூட்ட எச்சரிக்கைகள் மற்றும் வேக வரம்புகளைக் காட்டுதல், ஒலிபெருக்கி அறிவிப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் பொதுச் சேவை அறிவிப்புகளை வெளியிடுதல் ஆகியவை அமல்படுத்தப்படுகின்றன என மத்திய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ரேஷன் கார்டு இருந்தால் போதும்...! மாடு வாங்க ரூ.60,000 வரை கடன் பெறலாம்...! முழு விவரம் இதோ...

Tue Dec 16 , 2025
பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]
Cow Farm 2025

You May Like