சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகின்றார். கோவிந்தனுக்கு கண்ணன் என்ற மகன் இருந்த நிலையில் இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிகளுக்கு நான்கு வயது மற்றும் 9 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இத்தகைய நிலையில் மனைவியை சுகன்யாவுக்கு அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் கணவரை பிரிந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த இளைஞருடன் சென்று விட்டார். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் சுகன்யாவை தேடி வந்த கண்ணன் அங்கு இருந்த தன்னுடைய மகன் மற்றும் மகள்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் அந்த குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக மகனை கொண்டு சென்று மீண்டும் சுகன்யாவிடம் விட்டுவிட்டு வீடு திரும்பினார்.
மகள்களை தன்னுடனையே வைத்துக் கொண்ட நிலையில் மார்ச் 28ஆம் தேதி மூத்த மகளான ஒன்பது வயது சிறுமி அழுது கொண்டு தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பெரியம்மா நல்லம்மாள் எதற்காக அழுகிறாய் என்று கேட்டபோது, “தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் அவர் தனக்கு நடந்ததை விளக்கியுள்ளார். மேலும் தன்னுடைய நான்கு வயது தங்கை இடமும் தந்தை அதுபோல செய்ததாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு நல்லம்மாள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். பின் வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. கண்ணனை அழைத்து போலீசார் விசாரித்து விட்டு சிறுமைகளிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். பெற்ற மகள்களையே கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டு அவர் சித்திரவதை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுல்லார்.