SBI வங்கியில் வேலைவாய்ப்பு!… 1031 காலிப்பணியிடங்கள்!… ரூ.41,000 வரை சம்பளம்!… உடனே விண்ணப்பியுங்கள்!

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI- State Bank of India)காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘Channel Manager’ மற்றும் ‘Support Officer’ ஆகிய 1031 காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் / எஸ்.பி.ஐ. வங்கியில் பணிபுரிந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை. சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். திறம்பட வேலை செய்ய வேண்டும்.மேலே குறிப்ப்பிட்டுள்ள பணிகளுக்கு தேவையான சிறப்பு திறன்களை கொண்டிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் மும்பை, அகமதாபாத். புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, ஹைதராபாத், ஜெய்பூர், பாட்னா, அமராவதி, புது டெல்லி, கொல்கத்தா, கெளகாத்தி, பெங்களுரூ, லக்னோ, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் 87 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை என்ற மண்டலத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊர்களில் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.05.2017 -இன் படி 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பணி கான்ட்ரான்ட் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிகப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும். 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.https://bank.sbi/careers – அல்லது https://www.sbi.co.in/web/careers- என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.

நிரந்த பணிக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும். நேர்காணலுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், தனியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தகவல் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள முகவரி- https://www.onlinesbi.sbi/- என்ற இணைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

1newsnationuser3

Next Post

மனைவி விதவையாகிவிட கூடாது!... மரணத்திற்கு முன்பு விவாகரத்து!... பொருளாதார தேவைகளையும் பூர்த்திசெய்த கணவர்!

Tue Apr 11 , 2023
தெலங்கானாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர், மரணத்திற்கு முன்பே மனைவிக்கு விவாகரத்து உட்பட பொருளாதார ரீதியான தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்த சம்பவம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கனா மாநிலம் கம்மத் நகரை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன். 33 வயதான இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஹேமா என்ற பெண்ணிற்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. பிறகு ஆஸ்ரேலியாவுக்கு சென்ற ஹர்ஷ்வர்தன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து […]
telangana doctor dead

You May Like