தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் மூலமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான அடிகளை கடந்த 2020 ஆம் ஆண்டுதான் நாட்டினார் அதன் பிறகு சென்ற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இத்தகைய நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். இது தொடர்பாக பலர் அதிகாரம் மாற்றத்திற்காக செங்கோல் வழங்கப்பட்டது என்று தெரிவித்து வந்தனர். அதோடு சிலர் பல எதிர்மறையான கருத்துக்களையும் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் செங்கோல் பற்றி பல கருத்துக்கரைகள் வெளியாகி இருக்கிறது. இதனை நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். எனவும் டெல்லியில் மவுண்ட்பேட்டன் முன்னாள் பிரதமர் நேருவை சந்தித்தது உண்மை அந்த காலகட்டத்தில் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் வழங்கப்பட்டது என்று சொல்வது கட்டுக்கதை என்று கூறியுள்ளார்