Wow…! 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை…!

6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 5.9.2022 அன்று சென்னையில்‌ நடைடுபற்ற விழாவில்‌, பெண்களின்‌ உறுதி செய்து, அனைவரும்‌ பெண்கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, பெண்கள்‌ கல்வியறிவு, தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌ உருவாக்கிட சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை சார்பில்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ.1000/- வீதம்‌ உதவித்‌ தொகை வழங்கும்‌ “புதுமைப்‌ பெண்‌” திட்டம் தொடங்கப்பட்டது.

Tn Goverment College school

புதுமைப்‌ பெண் திட்டத்தின்‌ முதற்கட்டத்தில்‌ 1,16,342 மாணவிகள்‌ பயனடைந்து வருகின்றனர்‌. இத்திட்டத்தின்‌ மூலம்‌ இடைநிற்றலில்‌ இருந்து 12,000 மாணவிகள்‌ மீண்டும்‌
உயர் கல்வியில்‌ சேர்ந்து பயனடைந்துள்ளனர்‌. முதலமைச்சர்‌ அவர்கள்‌ கடந்த 8.2.2023 அன்று இரண்டாம்‌ கட்டமாக 104,347 மாணவிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்தினை தொடங்கி வைத்தார். புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ முதல்‌ கட்டமாக 5,070 மாணவிகள்‌ பயனடைந்து வருகின்றார்கள்‌.

இதனைத்‌ தொடர்ந்து புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6-ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை அரசு பள்ளியில்‌ பயின்று முதன்‌ முதலில்‌ இளங்கலை பட்டம்‌, பட்டயம்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப கல்வி பயிலும்‌ முதலாம்‌ ஆண்டு மாணவிகள்‌ 4,282 பேருக்கு புதுமைப்பெண்‌ பெட்டக்கத்துடன்‌ வேலைவாய்ப்பு வழிகாட்டு புத்தகம்‌ மற்றும்‌ நிதிநிலைக்கான கல்வியறிவு புத்தகம்‌ வழங்கப்பட்டது.

மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ நினைவு உயர்கல்வி உறுதித்‌ திட்டம்‌ புதுமைப்பெண்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டுள்ள மாதம்‌ ரூ.1000/- நிதி உதவியினை உயர்கல்விக்கு உத்திரவாதமாக மாணவிகள்‌ பயன்படுத்தி கொண்டு, சிறந்த கல்வியை கற்பதோடு,பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கும்‌ தங்களை தயார்‌ படுத்திக்கொண்டு உயர்ந்த இடத்தை மாணவிகள்‌ அனைவரும்‌ எட்ட வேண்டும்‌, உயர்கல்வி என்பதை உங்கள்‌ இலக்காக கொண்டு வாழ்வில்‌ வெற்றியடைய வேண்டும்‌ என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

2023-ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த மற்றும் கடலோர சுற்றுலா தளம்!... தமிழ்நாட்டின் லெமூர் கடற்கரை தேர்வு!...

Wed Mar 1 , 2023
2023-ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த கடற்கரை மற்றும் சுற்றுலா தளமாக தமிழ்நாட்டின் லெமூர் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு சிறந்த கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை இந்தியா டுடே நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள லெமூர் கடற்கரை என அழைக்கப்படும் காண்டிபுரம் கடற்கரை அதன் அழகிய இருப்பிடம் மற்றும் இயற்கைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்றதாக உள்ளது. எனவே இந்த […]
lemur beach

You May Like