வாட்டும் வெயில்!… உடல் சூட்டை தணிக்கும் ஆரோக்கிய டிரிங்க்ஸ்!… வீட்டிலேயே தயாரிக்க எளிய டிப்ஸ் இதோ!

கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிப்பதால், பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு களையும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம்.


கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம். வெயிலின் தாக்கத்தால் வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிக்காதவர்களுக்குச் சிறுநீரகக் கல் வரக் கூடும். உச்சி வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கு சாத்தியம் உள்ளது. பச்சிளம் குழந்தை கள், சிறு வயதுக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படையச் சாத்தியமுள்ளது. எனவே, அதிக அளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும், தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர்வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் மோர், உப்பும் மோரும் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சைப் பழச்சாறு, ORS உப்புக் கரைசல் ஆகியவற்றைப் பருக வேண்டும். அதன்படி, இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே டேஸ்டியான பானங்களை தயாரித்து உடல் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

மோர் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இது செரிமான பிரச்சனையையும் சரிசெய்ய உதவும். வெயில் காலத்தில் அடிக்கடி மோர் அருந்தினால் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். பனைவெள்ளம், எலுமிச்சை, ஏலக்காய், சுக்குப்பொடி, தண்ணீர், வேப்பம் மரத்தின் இலை அல்லது புதினா, ஆகிவற்றை கலந்து ஒரு ஆரோக்கியமான பானகமாக தயார் செய்யலாம். இதனை வெயிலின் போது பருகினால் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் மற்றும் இந்த பானகத்தில் பனைவெல்லத்தை சேர்ப்பதினால் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும், விட்டமின் சி நிறைந்தது.

கரும்பு சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் என பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவை உடலில் தொற்று நோயை எதிர்த்து போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. குளுமைத் தன்மை கொண்ட கரும்பு ஜூஸ், உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான குழாய் போன்றவற்றை சீராகவும் சம்நிலையாகவும் வைத்துக்கொள்ள உதவும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும். மேலும் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது.வெள்ளரிகள் அதிக அளவு ஹைட்ரேடிங் மற்றும் மினரல்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ்கள் அதிகம் உள்ளன. கோடை மற்றும் வெப்பம் மிகுந்த நாட்களில் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவாக இருக்கிறது. உடலின் வாட்டர் பேலன்ஸை மேம்படுத்த வெள்ளரிகள் உதவுகின்றன. வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது அதனை ஜூஸ் போட்டு குடித்தால் சரி அது உடலை ஈரபதத்துடன் வைத்துக்கொள்ளும்.

1newsnationuser3

Next Post

தீயாக பரவும் காய்ச்சல்.. மக்கள் கட்டாயம் இதை எல்லாம் செய்யக்கூடாது.. மத்திய அரசு எச்சரிக்கை...

Sun Mar 5 , 2023
இந்தியாவின் பல பகுதிகளில் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் […]
000 32zv826 0

You May Like