அடுத்த சர்ச்சை.. 12-ம் வகுப்பு பாட புத்தகங்களில் ஆர்எஸ்எஸ், மகாத்மா காந்தி, கோட்சே தொடர்பான பகுதிகள் நீக்கம்..

12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் புதிய புத்தகங்களில் ஆர்எஸ்எஸ், மகாத்மா காந்தி & கோட்சே தொடர்பான பகுதிகளை NCERT நீக்கியது

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து மகாத்மா காந்தி இந்து – முஸ்லீம் குறித்து பேசியது இந்து தீவிரவாதிகளுக்கு பிடிக்கவில்லை” மகாத்மா படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தல் போன்ற பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 2023-24 கல்வியாண்டில் திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது.. அதில் பல்வேறு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.. “சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியாவில் அரசியல்” என்ற தலைப்பிலான புதிய 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான காந்தியின் உறுதியான நாட்டம் இந்து தீவிரவாதிகளை எப்படித் தூண்டியது என்பதைப் பற்றிய அத்தியாயம், காந்திஜியை கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டது பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயத்தில் உள்ள “மகாத்மா காந்தியின் தியாகம்” என்ற துணைத் தலைப்பும் நீக்கப்பட்டுள்ளது.


மேலும் “ பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு இருந்தது போல் இந்தியா இந்துக்களுக்கான நாடாக மாற வேண்டும்” என்பதும் நீக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத வெறுப்பை பரப்பும் அமைப்புகளுக்கு எதிரான அடக்குமுறை, ஆர்எஸ்எஸ் மீதான தடை பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.

இதே போல் 12 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில், “மகாத்மா காந்தியும் தேசியவாத இயக்கமும்” என்ற அத்தியாயத்தில் ஒரு பத்தி திருத்தப்பட்டுள்ளது. அதில் “ஜனவரி 30 மாலை தனது தினசரி பிரார்த்தனை கூட்டத்தில், காந்திஜி ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளி நாதுராம் கோட்சே சரணடைந்தார்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, “காந்திஜி ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் சரணடைந்த கொலையாளி, புனேயைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்ற பிராமணர் ஆவார், அவர் காந்திஜியை முஸ்லிம்களை திருப்திப்படுத்துபவர் என்று கண்டித்த தீவிரவாத இந்து பத்திரிகையின் ஆசிரியர்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது..

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை, என்சிஇஆர்டி குறைத்தது.. அதில் குறிப்பாக 2002 குஜராத் கலவரம், பனிப்போர் மற்றும் முகலாய பேரரசு தொடர்பான அனைத்து குறிப்புகளும் நீக்கப்பட்டது.. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

சமூக பரவலாக மாறியதா கொரோனா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

Wed Apr 5 , 2023
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் தனிமனித பரவலாக தான் உள்ளது சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு முன்பே சுற்றுப்புறத்தில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவார்கள். காவல்துறையினர் அபராதம் விதித்து தான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இல்லை. முகக்கவசம் அவசியம் என்பதை பொது மக்கள் அறிந்து செயல்பட வேண்டும். நம்மை காத்துக் கொள்ள நல்ல […]
1015212 covid tally ani

You May Like