திமுக மூத்த தலைவர் காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்..!

WhatsApp Image 2025 07 28 at 12.14.16 PM

திமுக மூத்த தலைவரும், முன்னாள் மாநில கொள்கை பரப்பிணைச் இணைச் செயலாளரும், தற்போதைய தீர்மானக் குழு செயலாளருமான எம். எஸ். விஸ்வநாதன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்தார். அவரது மறைவிற்குஅரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த எம். எஸ். விஸ்வநாதன் பல்வேறு அரசியல் பங்களிப்புகளோடு, திமுகவில் பல பதவிகளை வகித்தவர். அவருடைய சிந்தனைகள், தெளிவான பேச்சுத் திறன்கள் மற்றும் மாநில அளவில் நிகழ்த்திய ஒழுங்கமைக்கப்பட்ட பணிகளால், கொள்கைப் பரப்பில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.

அரசியல் வாசிப்பு, சமூக ஊடக அணுகுமுறைகளில் தெளிவு மற்றும் தீர்மானக் குழு விவாதங்களில் கூர்மையான பார்வையுடன் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியவர். அவரது மறைவு, திமுகவினரையே அல்லாமல், பல்வேறு அரசியல் கட்சியினரிடையே உணர்ச்சி பூர்வமான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடல், அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் அரூர் அருகிலுள்ள கீரைப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் பல முக்கிய தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Read more: மனைவி பிரிந்த துக்கம்.. பீர் குடித்தே உயிரை விட்ட காதல் கணவன்..! என்ன நடந்தது..?

English Summary

Senior DMK leader passes away.. Political parties express condolences..!

Next Post

#Breaking : 6 பேர் பலி.. மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு.. கையில் துப்பாக்கி உடன் செல்லும் மர்ம நபர்.. வீடியோ..

Mon Jul 28 , 2025
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று மர்ம ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.. இதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர். நகரின் சதுசாக் மாவட்டத்தில் உள்ள ஓர் டோர் கோர் சந்தைகளில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான துப்பாக்கிச் […]
MixCollage 28 Jul 2025 12 15 PM 7895 2025 07 5f5b4c0fde580e384aa9f82acc9126ba 16x9 1

You May Like