கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் : நல்லகண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு !..

திடீர் உடல் நலக்குறைவால் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு . அவருக்கு தற்போது 97 வயதாகின்றது. நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றார்.

அவரது உடல் சீராக இருப்பதாகவும், பொதுப்பிரிவு மற்றும் சிறுநீரகப் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா , டெங்கு காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடித்தால் நல்லகண்ணுதான் முதல்வராக வர வேண்டும் என கூறுவார்கள் . அந்த அளவிற்கு அப்பழுக்கற்ற ஒரு தலைவர் நல்லகண்ணு. வாழ்க்கையில் சாதிக்க தியாகம் முக்கியம் என அவர் எப்போதும் கூறுவார். சற்றும் அவரது வழியில் இருந்து என்றும் மாறியதில்லை.

Next Post

அரசாங்க ஓய்வூதியதாரர்கள் எப்போது வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்…. தெரிந்துகொள்ளுங்கள்!

Sun Oct 2 , 2022
அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களில் வாழ்நாள் சான்றிதழை எப்போது புதுப்பிக்க வேண்டும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2022 ஓய்வூதியம் பெறும் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1க்கு பதில் அக்டோபர் 1ல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மிகவும் […]
ஓய்வூதியதாரர்கள்

You May Like