திடீர் உடல் நலக்குறைவால் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு . அவருக்கு தற்போது 97 வயதாகின்றது. நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றார்.
அவரது உடல் சீராக இருப்பதாகவும், பொதுப்பிரிவு மற்றும் சிறுநீரகப் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா , டெங்கு காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடித்தால் நல்லகண்ணுதான் முதல்வராக வர வேண்டும் என கூறுவார்கள் . அந்த அளவிற்கு அப்பழுக்கற்ற ஒரு தலைவர் நல்லகண்ணு. வாழ்க்கையில் சாதிக்க தியாகம் முக்கியம் என அவர் எப்போதும் கூறுவார். சற்றும் அவரது வழியில் இருந்து என்றும் மாறியதில்லை.