சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். அதோடு அவரை 8 நாட்கள் வரையில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அதோடு அமலாக்க துறையினரின் விசாரணை என்பது மருத்துவமனையில் தான் நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை விலையிட்டுள்ள அறிக்கை தொடர்பாக இ.எஸ்.ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது மருத்துவர்கள் வழங்கும் தகவலை தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருக்கிறது.