சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் இனி எந்த நகரத்திலிருந்தும் குடிமைப் பிரிவு எல்லைக்குள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்ற போலிச் செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சாகர் குமார் ஜெயின் என்ற நபர் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் “எவ்வாறாயினும், நெடுஞ்சாலைகளில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும். ஹெல்மெட் அணியாமல் இருப்பது குறித்து ஏதேனும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உங்களிடம் கேட்டால், உங்கள் பைக் மாநகராட்சி வரம்பிற்கு உட்பட்டது என்று கூறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான பத்திரிகை தகவல் பணியகமான, PIB இந்த செய்தியை மறுத்துள்ளது, இது போலியானது என இந்திய அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.. மோட்டார் வாகனச் சட்டத்தின் 129வது பிரிவின்படி, 4 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் பொது இடத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது “பாதுகாப்பான தலைக்கவசம்” அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது..
இதனிடையே இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம் மற்றும் அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலை https://pib.gov.in என்ற இணையதளத்திலும் சரிபார்க்கலாம்..