Sexual Harassment | ஒரு நீதிபதி செய்யுற காரியமா இது..? கோர்ட் அறையில் அலறிய பெண்..!! பகீர் சம்பவம்..!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுக்க சென்ற இடத்தில், நீதிபதியால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sexual Harassment | திரிபுரா மாநிலத்தில் வசிக்கும் 26 வயது இளம்பெண் ஒருவர், திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கணவரின் உதவியோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கடந்த பிப்.13ஆம் தேதி பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிபதி பிஷ்வாடோஷ் தார் (Bishwatosh Dhar) என்பவரிடம் வாக்குமூலம் அளிக்க சென்றார்.

பாலியல் வழக்கு என்பதால், நீதிபதி தனி அறையில் வாக்குமூலத்தை பெறுவார். அந்த வகையில், அந்த பெண்ணிடமும் நீதிபதி தனது தனி அறையில் வாக்குமூலம் பெற முனைந்துள்ளார். ஆனால் அந்த நீதிபதி, அறையில் உள்ள பாதுகாவலரை வெளியே அனுப்பியுள்ளார். பிறகு விசாரணையை தொடங்கிய அவர், அவரது இருக்கையில் இருந்து எழுந்து அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் எழுத்துபூர்வமான கடிதத்தை வழக்கறிஞர்கள் சங்கத்தில் கொடுத்துள்ளார். தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுக்க சென்ற இடத்தில், நீதிபதியால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : Annamalai BJP | மக்களவை தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றும் பாஜக..!! அடித்து சொல்லும் அண்ணாமலை..!!

Chella

Next Post

ஓரினச் சேர்க்கையால் விபரீதம்.! '8' வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.! காதலியுடன் சேர்ந்து மகனைக் கொன்ற தாய்.!

Wed Feb 21 , 2024
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வழக்கில் சிறுவனின் தாய் மற்றும் இன்னொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 16ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டான். இந்த சிறுவனின் மரணம் தொடர்ந்து மர்மமாக இருந்து வந்த […]

You May Like