ஷாக்கிங் நியூஸ்..!! ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்த பிளிப்கார்ட் நிறுவனம்..!! ஊதிய உயர்வு கட்..!!

இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட், பணிநீக்கம் அறிவிக்காதது பெரும் நிம்மதி அளித்தாலும், சம்பள குறைப்பை அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தச் சம்பள குறைப்பு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் என்பதால் அதிகப்படியான ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், எங்கள் ஊழியர்களின் அதிகப்படியான நலன் மனதில் வைத்து, எங்கள் நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்தக் கடினமான முடிவு நிறுவனத்தின் 4,500 ஊழியர்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களுக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில், கிரேடு 10-க்கு மேல் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு எவ்விதமான சம்பள உயர்வுகளும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு படி கிரேடு 10 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மேலாளர்கள் முதல் துணைத் தலைவர்கள் வரை பலதரப்பட்ட பதவிகளில் உள்ளவர்கள். இவர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை கட் செய்திருந்தாலும் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் திட்டமிட்டபடி போனஸ் என அறிவித்துள்ளது. அதன்படி, 70 சதவீத ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CHELLA

Next Post

"ஒரு டீ குடிக்க வந்தது குத்தமா"?? டீக்கடையில் வாலிபருக்கு கத்திக்குத்து! போதை ஆசாமிகள் கைது!

Fri Feb 24 , 2023
திருச்சி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த வாலிபரை குடி போதையில் இருந்த இரண்டு நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த சமயபுரத்தைச் சார்ந்த வாலிபர் விஜய் இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த இரண்டு நபர்கள் அவரிடம் தகராறு செய்திருக்கின்றனர். அவர்களின் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாத விஜய் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதமாக […]
IMG 20230224 WA0044

You May Like