கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணைவிகளை அணைத்து தகாத செயலில் விஜய் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் குழந்தைகள் நல குழுவிடம் புகாரளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தவெக தலைவர் விஜய்யின் விருது வழங்கும் விழா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மிகவும் கொச்சையாக பேசியிருந்தார். பரிசு பெற வந்த மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் குறித்து வேல்முருகன் ஆபாசமாக பேசியது தவெகவினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் மூலம் புகாரளித்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், சபாநாயகருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணைவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் விஜய் ஈடுபட்டார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் விஜய் மீது புகாரளித்துள்ளார்.
Read more: 8 குதிரைகள், 8 ஆசீர்வாதங்கள்.. இந்த புனித படத்தை வீட்டில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?