புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கும் சித்தர்களின் அபூர்வ மூலிகை!…

நம் நாட்டில் சித்தர்களும், முன்னோர்களும் பல வகையான மூலிகைகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் ஒன்றாக சிறந்து விளங்குவது முடக்கத்தான் கீரை. உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை தீர்க்கும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு.

முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, புற்று நோய் செல்களுக்கு எதிராக போராடி உடலில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.சொறி, சிரங்கு, படை போன்ற தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு முடக்கத்தான் இலையை அரைத்து பூசி வந்தால் நோய் உடனே குணமாகும்.

அதுமட்டுமின்றி முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி பனைவெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர குடலிறக்கம் நோய் குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் இலையை அரைத்து பச்சையாக குடிக்க கொடுத்தால் கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியாகி உடல் வலுப்பெறுவதோடு, செரிமான பிரச்சனை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்கிறது.

முக்கியமாக முடக்கத்தான் கீரை முடக்குவாதத்தை சரிசெய்வதோடு எலும்புகளுக்கு வலிமையை ஏற்படுத்தும் என்பதால் முதுகு வலி, மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்பு வலிமை பெறவும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவதிலும் முடக்கத்தான் கீரை பெரும்பங்கு வகிக்கிறது.

Maha

Next Post

Warning | தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம்..? வணிகர் சங்கங்கள் எச்சரிக்கை..!!

Fri Mar 29 , 2024
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும் இன்றளவும் தொடர்கிறது. தற்போது தேர்தல் செலவினம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வணிகர்கள் எடுத்துச் செல்லும் ரொக்கத் தொகை மட்டும் உயர்த்தப்படாமல் இருப்பது, நீதிக்கு முரணானது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித செய்திகளும் இல்லை. நேர்மையான வணிகம் செய்பவர்களின் […]

You May Like