சிறகடிக்க ஆசை: அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த தருணம்.. வசமா சிக்கிய ரோகிணி..! மீனா செய்ய போவது என்ன..?

siragadikka aasai latest episode

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. பல பொய்களை சொல்லி மனோஜை திருமணம் செய்து கொண்ட ரோகிணி எப்போது மாட்டுவார் என்பதை ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. இன்றைய எபிசோட்டில், ஒட்டு மொத்த குடும்பமும் சென்னையில் இருந்து பாட்டி ஊருக்கு தீபாவளி கொண்டாடுவதற்காக வந்துள்ளனர்.


அண்ணாமலை குடும்பம் பாட்டி வீட்டில் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுகிறார்கள். அப்போது சாமியார் வீடு தேடி வந்து அனைவரையும் எச்சரித்து செல்கிறார். தீபாவளி கொண்டாடிய பிறகு அனைவரும் கோவிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். ரோகிணியின் தாயாரும் அவரின் கணவரின் திதிக்காக கோவிலுக்கு வந்துள்ளார்.

எதிர்பாராத விதமாக இரண்டு விசேஷங்களும் ஒரே கோயிலில் நடக்கிறது. இதை அறியாத ரோகிணி மகிழ்ச்சியாக கோயிலுக்கு செல்கிறார். அப்போது அவரது தாயார் திதி கொடுக்க வர சொல்லி ரோகிணியை அழைக்கிறார். அதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்துவிட்டது. தொடர்ந்து நாளைக்கான புரோமோவில், தண்ணீர் எடுக்க வந்த மீனா, ரோகிணி கிரிஷ் மற்றும் அவரின் தாய் மூவரையும் ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

ஐயரிடன், இது என் ஒரே மகள் கல்யாணி என்றும் இது அவனின் மகன் க்ரிஷ் என்றும் கூறுகிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா தண்ணீர் குடத்தை கீழே நழுவ விடுகிறாள். இதை பார்த்த ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள். தொடர்ந்து கடுப்பான மீனா, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் நடிக்கிறேல என்று கேட்டு ரோகிணிக்கு பளார் விடுகிறார். மீனா இனி என்ன செய்ய போகிறாள்.? ரோகிணி பற்றிய உண்மையை குடும்பத்தில் சொல்வாலா..? என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.

Read more: மும்பை 26/11 பாணியில் தொடர் தாக்குதலைத் திட்டமிட்டிருந்த பயங்கரவாத நெட்வொர்க்..? அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..

English Summary

siragadika aasai: The moment everyone was eagerly waiting for.. Rohini caught in the act..! What is Meena going to do..?

Next Post

ஆசியாவின் டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள்: முதலிடத்தில் மும்பை.. முழு லிஸ்ட் இதோ..!

Wed Nov 12 , 2025
சிட்டி லைஃப் இன்டெக்ஸ் 2025 (City Life Index 2025) வெளியிட்ட ஆசியாவின் “மிகவும் மகிழ்ச்சியான 10 நகரங்கள்” பட்டியலில், சமூக ஒற்றுமை, மனநிலை நலன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை சிறப்பாக இணைக்கும் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பண்பாட்டு பன்முகத்தன்மை, நிலைத்த வளர்ச்சி மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இந்த நகரங்கள், எதிர்கால மகிழ்ச்சியான நகர வாழ்க்கையின் மாதிரியாக திகழ்கின்றன. இந்த ஆண்டில் அந்த […]
happiest cities list 1

You May Like