கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு 50,000 நிவாரணத் தொகையாக அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று முன்தினம் நேரடியாக விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார்.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி பணி நீக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.