அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்ற சோசியல் மீடியா பிரபலம் மரத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் சமூக ஊடக பிரபலம் ரவுடி பாட்டீ எனப்படும் ரோகித் பாட்டீ. நேற்று நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ரோகித் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவருடன் இரண்டு நண்பர்கள் வந்துள்ளனர். அவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குஜார் சமூகத்தினரான இவர் பேஸ்புக், இன்ஸ்டாவில் பிரபலமாக இருந்து வருகின்றார். இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபேன்ஸ் உள்ளனர். நேற்று நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. பின்னர் வீடு திரும்பியபோது சுகாத்பூர் சுரங்கப்பாதை அருகே அதிகாலை 3 மணியளவில் கார் திருப்பத்தை கவனிக்காமல் வேகமாக சென்று மரத்தில் மோதியுள்ளனர்.
வாகனத்தை ஓட்டிய ரோகித் சம்பவ இடத்தில் உயிரிழந்தாகவும் நண்பர்கள் மனோஜ், அதிஷ் காயங்களுடன் அரசு மருத்துவமனையிலும் அனுமதிகக்ப்பட்டனர். இருவருக்கும் தீவிரமாக காயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.இவரின் இறுதிச் சடங்கு வீடியோக்களும் வெளியாகி உள்ளது.