இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்க விடாமல் சில “சக்திகள்” தடுக்கிறது!!! நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி?

சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தான் இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏனென்றால் 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைமாற்றம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஆனால் தற்போது சர்வதேச கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளது, இதனால் இந்தியாவில் இன்று பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சின. தொடர்ந்து பல நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுக்கும், டீசல் ரூ.94.24 காசுக்கும் விற்பனையாகி வருகிறது, இன்றும் இதே விலை தொடர்ந்தது.


இந்நிலையில் இது குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டறில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாப்பது போல தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsnation_Admin

Next Post

#கிருஷ்ணகிரி :குடும்ப தகராறில் குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்.. குழந்தை நீரில் மூழ்கி இறந்த சோகம்..!

Wed Dec 7 , 2022
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள கீரனப்பள்ளி கிராமத்தில் பெயிண்டர் வேலை செய்து வருகின்ற தமிழரசன் வசித்து வருகிறார். இவரின் மனைவி சந்தியா (21)  என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் மதுமிதா என்ற மகள் இருக்கிறாள்.  இந்த நிலையில் தமிழரசனுக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த மனைவி கடந்த திங்கட்கிழமை அன்று […]
n449369398167039316734678b66a2d71522a00681f86004f364d94f790fd040d0cf591750965a1ce503218

You May Like