சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஸ்பர்ஷ் நடமாடும் வாகனம் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகின்ற 01.07.2025 அன்று வருகைதரவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட முப்படைய சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள். ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஸ்பர்ஷ் மொபைல் வேன் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு 01.07.2025 அன்று வருகை தர உத்தேசிக்கக்பட்டுள்ளது. ஸ்பர்ஷ் மொபைல் வேனில் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய அலுவலர்களும் வருகின்றனர். இந்த முகாம் 01.07.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.
முகாமிற்கு வரும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் படைப்பணிச் சான்று அடையாள அட்டை ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, பான் கார்டு, ஆதார் அட்டை மற்றும் ஓய்வூகியம் பெறும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள முப்படைய சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.