மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மத மோதலை தூண்டும் பேசியதாக ஹெச். ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஹெச்.ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று கூறிய நீதிமன்றம் ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் இந்த விசாரணைக்கு ஹெச். ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையின் போது காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் ஹெச். ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More : மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்கள்… விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்…!